Tuesday, February 4, 2014

சிங்களப் படையினரின் நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கைப் படையினரின் நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 19 பேர் இலங்கைப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 



இலங்கை சிறையில் உள்ள 57 மீனவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பறிமுதல் செயப்பட்ட 11 படகுகள் மற்றும் வலைகளையும் மீட்டுத்தரவும் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை மிகுந்த வேதனை அளிப்பதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


Chief Minister Jayalalithaa's letter to the Prime Minister on the operation of the Sri Lankan forces

No comments:

Post a Comment