Tuesday, February 4, 2014

ராஜீவ்காந்தி கொலை வழக்கு - 3 பேர் தூக்கை ரத்து செய்ய அரசு எதிர்ப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய கோரும் வழக்கில். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வாகன்வாதி வாதம் செய்துள்ளார். முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி வாகன்வாதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 



மூவரின் கருனை மனு காலதாமதமாக நிராகரிப்பை கருத்தில் கொள்ளக் கூடாது. கொலைக் குற்றத்தின் தன்மையை மட்டுமே பார்க்கவேண்டும் எனவும் வாகன்வாதி வாதம் செய்துள்ளார். தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய், சிவகீர்த்திசிங் அமர்வு விசாரணை செய்துள்ளது. 


பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேர் தரப்பில் வழக்கறிஞர் யுகி சவுத்ரி ஆஜராகி வாதம் செய்துள்ளார். தேவையற்ற காலதாமதத்தால் அப்பாவிகள் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் யுகி சவுத்ரி கூறியுள்ளார். 3 பேரும் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர் எனவும் யுகி சவுத்ரி கூறியுள்ளார். இருதரப்பு வாதத்தை கேட்ட 3 நீதிபதி அமர்வு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். 

No comments:

Post a Comment