கடந்த 1ம் திகதி லண்டனில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்புக்கு எதிரான மாநாட்டில், மகா.தமிழ் பிரபாகரன் ஆவணப் படம் ஒன்றை போட்டுக்காட்டியுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) கடந்த மாதம் லண்டன் பாராளுமன்றில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு மாநாட்டை நடத்தியது. அதில் பல பிரித்தானிய எம்.பிக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.
இவர்கள் அனைவருக்கும் முன் இந்த ஆவணப்படம் நாடாளுமன்றில் காண்பிக்கப்பட்டது, சிங்கள அரசை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதவிர சிங்கள அரசியல்வாதிகளும் கடும்போக்காளர்களும் கடும் கோபமடைந்துள்ளார்கள் என்றும் குறித்த சிங்கள ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
No comments:
Post a Comment