ரோபோக்களுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி.
மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர் இவர்.
ஜகன்னாதன் ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபோக்களின் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர்.
இதில் ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார்.
ரோபோக்கள் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார்.
எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில்வைத்து மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபோவின் செயல்பாட்டை மாற்றியமைத்துள்ளார்.
No comments:
Post a Comment