சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிய இராணுவ கேணல் உள்ளிட்ட பன்னிரெண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹாஓய அரலகங்வில என்னும் இடத்தில் சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 28 மரங்கள் இராணுவ ட்ரக் வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட போது மஹாஓய பொலிஸார் குறித்த இராணுவ உத்தியோகத்தர்களை கைது செய்துள்ளனர்.
பொலனறுவை பிரதேச முகாம் ஒன்றிற்கு எடுத்துச் செல்வதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த இராணுவ உத்தியோகத்தர்கள் சட்டவிரோதமான முறையில் மர விற்பனையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment